.
.

.

Latest Update

விநாயகருக்கு அருகம்புல் சாற்றுவது ஏன்


விநாயகப் பெருமானே விசேஷமான கடவுள். அவருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சித்து வழிபடுவது இன்னும் விசேஷம்!

யமனுடைய மகன் அனலன் என்கிறது புராணம். அவன் அனல் வடிவிலானவன். அபூர்வ வரம் பெற்றிருந்தான். அதாவது, அனல் வடிவமான அவன், யாருக்கும் தெரியாமல் ஒவ்வொருவருடைய உடலிலும் புகுந்து, அவரவரை உருக்கி உருக்குலைப்பதே – அவன் பெற்ற வரம்.

அதன் காரணமாக எண்ணற்ற மனிதர்களும் தேவர்களும் முனிவர்களும் ஞானிகளும் உருக்குலைந்து போனார்கள். துயரம் தாங்காத தேவர்கள் ஸ்ரீவிநாயகரை நோக்கித் துதித்து முறையிட்டார்கள். இதனால் இன்னும் கோபமான அனலன் தேவர்களை நெருங்கினான். அதேவேளையில்… விநாயகர் அங்கே தோன்றினார்.

தேவர்கள் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்கள். தன் துதிக்கையால், அனலனை வளைத்துப் பிடித்து அப்படியே விழுங்கினார். அனல் வடிவமான அனலன் விநாயகர் வயிற்றுக்குள் போனதும், உலகத்தில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் உடல் கொதித்துத் துயரப் பட்டன.

உலகத்தையே தன் பெருத்த வயிற்றில் கொண்டவரல்லவா கணபதி. பிறகு… அவர் வயிற்றில் அனலன் புகுந்ததால் அனைத்து உலகமும் அல்லல் படும்தானே!

விநாயகரின் திருமேனியைக் குளிர வைப்பதற்காக, பாலை எடுத்துக் குடம் குடமாக அவர் மீது ஊற்றினார்கள். சந்திரன் தன் அமுத மயமான ஒளிக்கதிர்களைச் சாற்றினான். மிகவும் குளிர்ச்சி பொருந்திய பாம்புகளை எடுத்து விநாயகர் மீது சுற்றினார்கள். ஆனாலும் பலனில்லை. விநாயகரின் திருமேனி குளிரவே இல்லை!

அப்போது சப்தரிஷிகள் ஆளுக்கு 21 அருகம்புல்லை எடுத்து விநாயகர் திருமேனியில் இட்டு அர்ச்சித்து பூஜித்தார்கள். அவ்வளவுதான்… அப்போதே விநாயகப்பெருமானின் திருமேனி குளிர்ந்தது. உலகத்து உயிர்களும் கொதிப்பு நீங்கி அமைதி அடைந்தன.

அன்று முதல், விநாயகருக்கு அருகம்புல் சார்த்தும் வழிபாடு தொடங்கியதாகச் சொல்கிறது புராணம்.

– அஸ்ட்ரோ தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி.cel- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles