.
.

.

Latest Update

கல்வி வரமருளும் கூத்தனூர் சரஸ்வதி


🔯தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவிக்கென்றே தனிக்கோயில் உள்ள திருத்தலம் கூத்தனூர்.

🔯சரஸ்வதி இத்தலத்தில் கருவறையில் கோயில் கொண்டதோடு மட்டுமன்றி, அரிசொல் ஆறு எனப்படும் அரசலாற்றில் கங்கை, யமுனை நதிகளோடு கலந்து தட்சிண திரிவேணி சங்கமமாக பரிணமிக்கிறாள் என பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#தலவரலாறு

🔯ஒரு சமயம் நான்முகனுக்கும் சரஸ்வதிக்கும் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் சபித்துக்கொண்டனர்.

🔯இதன் விளைவாக பூமியில் பகுக்காந்தன், சிரத்தை எனும் பெயர்களில் சகோதரர்களாக பிறக்க நேரிட்டது.

🔯காலம் கணியும் போது இருவருக்கும் திவ்யஞானம் சித்திக்கவே பெரும் குழப்பநிலை உருவானது.அப்போது சிவபெருமான் தோன்றினார்.

🔯இப்பிறவியில் சகோதரர்களாக பிறந்தமையால் இருவரும் மணம் புரிவது உலக நியதிக்கு எதிரானது.

🔯எனவே சரஸ்வதியை கூத்தனூரில் குடிகொண்டு அடியார்களுக்கு ஞானவளம் நல்குமாறு அருள்பாலித்தார்.

🔯ஆகையால் சிரத்தையாக பிறந்த சரஸ்வதி இத்தலத்தில் கோயில் கொண்டாள் என்கிறது தல வரலாறு.

🔯இன்றுவரை தேவி சரஸ்வதி கன்னி தேவியாகவே அருள்பாலிக்கிறார்.

🔯பகுக்காந்தனாகப் பிறந்த நான்முகன் பித்ரு காரியங்களில் முக்கியமாகப் போற்றப்படுவார் என ஈசன் அருள் வழங்கியதால் கூத்தனூரில் அரசலாற்றில் புரியும் பித்ரு காரியங்கள் விசேஷ பலன்களைத் தருவதாக ஐதீகம்.

#கூத்தனூர் #பெயர்வர #காரணம்

🔯அம்பாள்புரி, ஹரிநாகேஸ்வரம் என புராண காலத்தில் அழைக்கப்பட்ட இத்தலத்தை இரண்டாம் ராஜராஜன், தன் சபையில் அரசவைப்புலவராக விளங்கிய சரஸ்வதியின் அருள் பெற்ற ஒட்டக்கூத்தருக்கு பரிசாக வழங்கினார்.

🔯(ஒட்டக்)கூத்தருக்குப் பரிசாக வழங்கப்பட்டதால் இத்தலம் கூத்தன்+ ஊர் = கூத்தனூர் என்றாயிற்று.

🔯ஒட்டக்கூத்தருக்கும் ஆலயத்தில் தனி சந்நதி உள்ளது.

#ஆலய #சிறப்புக்கள்

🔯விமானக்கலசம் ஞானத்தின் உருவாய் சரஸ்வதி இங்கு உறைவதைக் குறிக்கும் வகையில் ஐந்து எனும் எண்ணிக்கையில் உள்ளது.

🔯கருவறையில் வீணையை கையில் ஏந்தாத சரஸ்வதியை தரிசிக்கலாம்.

🔯அர்த்த மண்டபத்தில் ஆலயத்தில் அருளாட்சி புரியும் மூர்த்தங்களின் உற்சவ விக்ரகங்கள் அருள்கின்றன.

🔯இத்தல நடராஜரின் பாதத்தின் கீழ் காணப்படும் முயலகன், பக்கவாட்டில் இல்லாமல் நேராக உள்ளது சிறப்பு.

🔯மகாமண்டபத்தின் இடது புறம் நான்கு முகங்களுடன் வேதம் ஓதும் நான்முகன் அருள்புரிகிறார்.

🔯கருவறையின் முன் சரஸ்வதியின் வாகனமான ராஜஹம்ஸம் எனப்படும் அன்னம் அன்னையை நோக்கி கம்பீரமாக நிற்கிறது.

#அன்னையின் #அருட்கடாட்சம்

🔯கம்பருக்காக இந்த சரஸ்வதி கிழங்கு விற்கும் மூதாட்டியாகவும், இடையர் குலப் பெண்ணாகவும் நேரில் வந்து சங்கடங்கள் தீர்த்திருக்கிறாள்.

🔯ஒட்டக்கூத்தரை எதிரிகள் சூழ்ந்து கொண்டு, பரணி பாடினால் விட்டுவிடுவதாகக் கூற, கூத்தரின் நாவில் அமர்ந்து பரணி பாடினாள் இந்த அன்னை.

🔯பிறவியிலேயே பேச்சிழந்த புருஷோத்தமன் எனும் பக்தனுக்கு தன் தாம்பூல எச்சிலைத் தந்து பூவுலகம் போற்றும் புருஷோத்தம தீட்சிதர் ஆக்கிய பெருமை பெற்றவள் இந்த தேவி.

#வழிபாடு

🔯பௌர்ணமி அன்று இந்த அன்னைக்குத் தேன் அபிஷேகம் செய்து, அந்த பிரசாத தேனை மோதிர விரலால் சரஸ்வதியை தியானித்தபடி உட்கொள்ள, கல்வியறிவு பெருகும் என்பது ஐதீகம்.

🔯சரஸ்வதி பூஜையன்று பக்தர்கள் சரஸ்வதி தேவியின் பாதங்களை தாங்களே பூஜிக்கும் வகையில் கருவறையிலிருந்து நீண்ட பாதங்கள் அமையுமாறு அலங்கரிப்பது கண்கொள்ளாக் காட்சி.

🔯விஜயதசமி அன்று புகழ்பெற்ற கலைஞர்கள் இத்தலம் வந்து தங்கள் கலைத்திறமையை தேவிக்கு அர்ப்பணிப்பது வழக்கம்.

🔯மாணவ, மாணவியர் தேர்வு எழுதும் முன் தங்கள் எழுதுகோலை இந்த தேவியின் முன் வைத்து வணங்கிச் செல்கின்றனர்.

#அமைவிடம்

🔯மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் எனும் ஊரிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது.

-ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles