.
.

.

Latest Update

தலைமை பதவி தரும் ஜேஷ்டாபிஷேம் !


தலைமை பதவி தரும் ஜேஷ்டாபிஷேம் !

பெருமாளை தரிசித்தால் பலன் கிடைக்கும் !

ஜேஷ்டா நட்சத்திர நாளில் பெருமாளை தரிசனம் செய்தால் தலைமைப் பதவி தேடி வரும் என்பது ஐதீகம். கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்றும் பெயர் உண்டு. எனவே இந்த நட்சத்திர நாளில் நடைபெறும் அபிஷேகத்தை, ஜேஷ்டாபிஷேகம் என்று அழைக்கின்றனர்.

ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். இந்த அபிஷேகத்திற்கு வழக்கமாக வடபுறத்தில் ஓடும் கொள்ளிடத்தில் நீர் எடுப்பதற்குப் பதிலாக, தெற்குப் புறம் ஓடும் புனிதக் காவிரியில் இருந்து, தங்கக் குடங்களில் நீர் எடுக்கப் பட்டு யானை மேல் வைத்து பாசுரங்களைப் பாடிய படி எடுத்து வந்து பெருமாளுக்கு அபிஷேகம் செய்வார்கள்!

பிறகு பெருமாளுக்கு அரிய மூலிகைகள் கலந்த தைலக் காப்பு சார்த்தப்படுகிறது. மறுநாள் பெரிய பாவாடை வைபவம் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில், மா, பலா, வாழை, தேங்காய் துருவல், நெய் ஆகியவற் றைச் சேர்த்து பிரசாதமாக பெருமாளுக்கு படைப்பது வழக்கம்!

இதையடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகமும், அடுத்த நாள் பெரிய பாவாடை வைபவமும் நடைபெறும். இந்திரன், ஜேஷ்டாபிஷேகத்தைச் செய்து பெருமாளின் பேரருளைப் பெற்றான் என்கிறது புராணம்.

எனவே உயர் பதவியில் இருப்பவர்கள், தலைமைப் பொறுப்பு க்கு ஏங்கித் தவிப்பவர்கள், இழந்த பதவியைப் பெறப் போராடுபவர்கள், தொழில் அதிபர்கள் இந்த நாளில் ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்தால் பலன் கிடைக்கும்.

உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம் ஸ்ரீ கால பைரவி
ஜோதிட நிலையம் விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம் ஆத்தூர்.அரசு மருத்துவமனை எதிரில் ஆத்தூர் சேலம் (மாவட்டம்)
636102 சிறந்த முறையில் வாழ்வை மாற்ற ஜோதிடம் மற்றும் வாஸ்து சம்மந்தமான ஆலோசனை பெறுவதற்க்கு ஜோதிட ஆசான் மு.கிருஷ்ண மோகன் 8526223399 , 9976192660 , 9843096462

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )