15.5.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 1ம்தேதி.
நிறைந்த அம்மாவாசை இரவு 6.07 மணி வரை பின் சுக்லப்பட்சத்து வளர்பிறை பிரதமை திதி.
பரணி நட்சத்திரம் மதியம் 11.29 மணி வரை பின் கார்த்திகை நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 8 முதல் 9 மணி வரை. மாலை 5 முதல் 6 மணி வரை.
சூலம்-வடக்கு.
ஜீவன்-0: நேத்திரம்-0;
பகல் அம்மாவாசை.
கார்த்திகை விரதம்.
ஸ்ரீ சூரிய பகவான் அதிகாலை 5.08 மணிக்கு ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
15.5.2018 செவ்வாய்கிழமை ராசிபலன்.
மேஷம்: வாழ்க்கையில் ஒழுக்கம் கடைப்பிடிப்போம். குழந்தைகளுக்கு ஒழுக்கம் கற்றுத் தருவோம். குடும்ப மரியாதை கூடும்.
ரிஷபம்: சிறப்பு சொற்பொழிவு செய்வீர்கள். உங்கள் பேச்சில் கருத்து இருக்கும். அந்தஸ்து மிக்கவர்கள் பாராட்டுவார்கள்.
மிதுனம்: திறமையான செயல் மூலம் வெளியுலகில் புகழ் பெறுவீர்கள். உறவுகள் ஒன்று கூடும். இடம் வாங்கி வீடு கட்டலாம்.
கடகம்; எதிர்பாராமல் பிரயாணம் உருவாகும். பிரயாணம் சந்தோஷத்தை கொடுக்கும். குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைவார்கள்.
சிம்மம்: அரசியல் செல்வாக்கு அந்தஸ்து கூடும். மக்கள் பணி ஆற்றலாம். மனம் சந்தோஷம் அடையும்.
கன்னி: பெண்களால் பிரச்சினைகள் உருவாகும். இன்று மாலை 5.14 மணி வரை சந்திராஷ்டமம். ஸ்ரீ பத்ரகாளியம்மன் தரிசனம் செய்யுங்கள். மாலைக்கு பிறகு நன்மைகள் நடக்கும்.
துலாம்: திட்டமிட்டு காரியத்தை தொடங்கலாம். அது ராங்கா போகாது. தலைமை பதவி கிட்டும். இன்று மாலை 5.14 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம்.
விருச்சிகம்: புதிய நட்பை நாடுவோம். அந்த நட்பிடம் இருந்து அன்பு என்னும் மடல் வரும். ஹேப்பி.
தனுசு: நடிகரை சந்திப்போம் அறிமுகம் கிட்டும். ஆனந்தமான நேரம். மறக்க முடியாத தருணம்.
மகரம்; வேலை கிடைச்சாச்சு. வாழ்க்கை வசந்தம். அடுத்து திருமணம் பேசவேண்டியதுதான்.
கும்பம்: எதிர்பாராமல் திருப்பங்கள் உருவாகும். எல்லாம் நன்மைக்கே. உறவு கூடி வாழ்த்தும்.
மீனம்: முதன்மையான மதிப்பெண் வாங்கலாம். தேர்வு விளையாட்டு பணி எல்லாவற்றிலும் எதிர்க்க ஆள் இல்லை.
நாளை சந்திப்போம்
Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.