குரு பெயர்ச்சி பலன்கள் – சிம்மம்
நட்சத்திரம் – மகம், பூரம், உத்ரம் 1ம் பாதம்
2.9.2017 காலை 6.39 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்து 3.10.2018 வரை சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இந்த குரு பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பார்போம்
இதுவரை 2ம் இடத்தில் குரு பகவான் இருந்ததால் தாராளமான தன வரவுகளையும் குடும்ப நிம்மதியையும் பெற்று மகிழ்ந்த நீங்கள் இப்போது 3ம் இடத்திற்கு பெயர்ச்சி அடையும் குரு பகவானால் மேலும் ஊக்கமாக உழைப்பதற்கு தயாராகி இருப்பீர்கள்.
புகழ் மிக்க நபர்கள் உங்களுடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொள்வார்கள். புது வீடு கட்டும் எண்ணம் மனதில் உதிக்கும் காலம் இது. பல்வேறு விதமான வருமான வாய்ப்புகள் வாசல் தேடி வரக்கூடியதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வப்போது சிறு மனக்குழப்பம் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் முயற்சிகளில் முழு மூச்சுடன் ஈடுபடுங்கள், வெற்றி நிச்சயம்.
இழந்த புகழ் செல்வாக்கு அனைத்தையும் திரும்ப பெற்று விடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக முயற்சிகள் எடுப்பது அவசியமாகும்.
மொத்தத்தில் முயற்சிகளை முடுக்கிவிட்டு மன மகிழ்ச்சிக்கு வழி வகுத்து கொள்ளும் காலம் இது.
கீழப்பெரும்பள்ளம் சென்று கேது பகவானை வழிபடுங்கள். பட்டீஸ்வரம் துர்கை அம்மனை வழிபடுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள் 1,3
அதிர்ஷ்ட நிறங்கள் ஆரஞ்சு, மஞ்சள்
பலன்கள் சதவிதம் – 35%