புலி பதுங்கி வேட்டையாடும் என்று சொல்வார்களே அது மாதிரிதான் ராஜ்கிரண் பாலிசி. மஞ்சப்பை, கொம்பன் என்று வெற்றி வேட்டையாடிய ராஜ்கிரண் அடுத்து எதிர் பார்ப்புடன் இருப்பது சத்யசிவா இயக்கிய “ சிவப்பு “ படத்தை ! தயாரிப்பாளர் முக்தாகோவிந்தின் மரணத்தால் தடை பட்டிருந்த சிவப்பு படத்தை தேசிகன் என்பவர் ராஜ்கிரணின் கதாப்பாத்திரத்தால் ஈர்க்கப்பட்டார். உடனே படத்தை மொத்தமாக வாங்கி விரைவில் ரிலீஸ் செய்ய இருக்கிறார். சிவப்புக்கு பச்சை கொடி காட்டியாச்சு.