கபி & அபி சித்திரக்கண்கள் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு “ நனையாத மழையே” என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் அருண்பத்மநாபன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் மலையாளத்தில் பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். இவர் இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற வைதேகி நடிக்கிறார். இவர் ஏற்கனவே 49 – O என்ற படத்தில் நடித்திருக்கிறார். மற்றும் அனுமோகன், சங்கர், நாராயணசாமி, பொள்ளாச்சி நாச்சிமுத்து, கோவை சிவா, மாஸ்டர் கபிலேஷ்கணபதி, செல்வி சக்தி ஷிவானி ஆகியோருடன் கானாபாலா முக்கிய வேடமேற்கிறார்.
ஒளிப்பதிவு – கிச்சாஸ்.. இவர் அரண்மனைக்கிளி உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.
இசை – சௌந்தர்யன்
பாடல்கள் – நா.முத்துகுமார், அறிவுமதி, சீர்காழி சிற்பி
நடனம் – தினேஷ்
ஸ்டன்ட் – ஸ்பீட் மோகன்
எடிட்டிங் – V.ஜெய்சங்கர்
தயாரிப்பு மேற்பார்வை – சிவா
கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்குகிறார் மகேந்திரகணபதி.
படம் பற்றி இயக்குனர் மகேந்திரகணபதி கேட்டோம்…
இது ஒரு காதல் கதை தான். ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்று சொல்வார்கள். அதாவது ஒரு குடும்பம் விருத்தி அடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான்.அதே நேரத்தில் ஒரே ஒரு பொய் ஒரு கல்யாணத்தையே நிறுத்தி விடும் என்பது நிஜம்தானே.
எல்லா மழை துளியுமே பூமியை தொட்டவுடன் அந்த ஒரு துளி கூட ஏதோ ஒரு இலக்கை நோக்கி போகும்.
இந்த நனையாத மழையே – மழைத்துளி எந்த இலக்கை நோக்கி போகிறது ? என்பது கதை !
ஆறு அருமையான பாடல்கள் சௌந்தர்யனின் இசையில் நிச்சயம் ஹிட் ஆகும் என்றார் இயக்குனர் மகேந்திரகணபதி.