நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் (மே) இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்றும் பொறுப்பு கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றும் அறிவித்திருந்தார்.
நடிகர் சங்கத்துக்கும் நடிகர் விஷாலுக்கு எப்போதுமே பஞ்சாயத்து தான் இந்த இரண்டு பேரில் யாராவது நேரில் சந்தித்துக் கொண்டால் அந்த இடம் தீபாவளி பட்டாசுக்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் தற்போது நடிகர் விஷால் சென்னையில் குறிப்பிட்ட சில நடிகர்களை வரவழைத்து ரகசிய கூட்டம் நடத்தினார். ஏற்கனவே திருட்டு சி.டி. விற்றவர்களை போலீசில் பிடித்து கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தினார். நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, தன்னை இழிவாக பேசியதாக குற்றம் சாட்டினார். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவது பற்றியும் கருத்துக்கள் வெளியிட்டார்.
இந்த நிலையில் தன் ஆதரவு நடிகர்களை அழைத்து விஷால் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளார். இக்கூட்டம் விஷாலின் வீட்டில் நடந்துள்ளது. நடிகர்கள் நாசர், ஆனந்தராஜ், பூச்சி முருகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று உள்ளனர். பல்வேறு விஷயங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.