ஆந்திரா தமிழ்நாடு கேரளா கர்நாடகா திரைத்துறையினர் இணைந்து க்யூப் நிறுவனம் கட்டணம் குறைக்க வேண்டும் எனவும் அப்படி கட்டணத்தை குறைக்கவில்லை எனில் மார்ச் 1 ம் தேதி முதல் திரையரங்குகள், படப்பிடிப்பு நிகழ்ச்சிகள், புதிய படங்கள் வெளியீடு செய்வதில்லை என முடிவு செய்துள்ள நிலையில் முதல் கட்ட பேச்சுவார்த்தை ஹைதராபாத்தில் நடைபெற்றது அப்போது தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கலந்து கொண்ட நிர்வாகிகளிடம் இருந்த வேகம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது இல்லை ஏனோ தானோ என கூட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இடையில் வேறு ஓரிடத்தில் நடைபெற்ற சந்திப்பில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை க்யூப் நிர்வாகம் சரி செய்து விட்டதாக தகவல்கள் வருகின்றன.
மேலும் நேற்று நடந்த திருச்சி திரையரங்குகள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு இல்லை எனவும் எப்போதும் போல் திரையரங்குகள் இயங்கும் எனவும் தீர்மானம் போடப்பட்டுள்ளது.