எவர்க்ரீன் s.சண்முகம் தயாரிப்பில் ஆர் வி ஆர் இயக்கத்தில் உருவான அஞ்சுக்கு ஒண்ணு திரைப்படத்திற்கு (யு / ஏ ) கிடைத்துள்ளது.
இதை பற்றி இயக்குநர் கூறியதாவது:
இப்படம் கட்டிட தொழிலாளர்களாய் பணிபுரியும் ஐந்து இளைஞர்களுக்கும் ஒரு பெண்ணுக்குமான கதை, அவர்களின் வாழ்க்கையை மிக மிக எதார்த்தமாக பதிவு செய்துள்ளேன்.
ஆனால் தணிக்கை குழுவினர் எதற்கெடுத்தாலும் கட் கொடுக்கிறார்கள். இது வருத்தமாக உள்ளது. உதாரணமாக கட்டிட வேலை நடைபெறும் இடத்தில் விலைமாதுவிடம் என் கதைநாயகர்கள் இருந்தார்கள் எனும் காட்சிக்கு பெண்ணை அணைக்குமாறு கூட காட்சி வைக்காமல் ஆணுறை சிதறி கிடக்குமாறு மட்டும் காட்சி வைத்தேன் இதற்கெல்லாம் கட் கொடுக்கிறார்கள். நாயகியின் தொப்புள் பகுதிக்கு அருகில் கன்னத்தை கொண்டு செல்லும் காட்சிக்கும் கட் கொடுக்கிறார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் கட் கொடுத்தால் எப்படிதான் படம் எடுப்பது. இத்திரைபடத்தை பாருங்கள் நிச்சயமாக ஒரு இடத்திலும் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் எந்த காட்சியும் அமைந்திருக்காது. நிச்சயமாக இத்திரைப்படம் மக்கள் அனைவராலும் ரசிக்கும் வண்ணம் அமையும். ஏன் தணிக்கை குழுவினரே இந்த மாதம் நாங்கள் நாற்பது படத்திலேயே இதுதான் மிக சிறந்த படம் என்று கூறினார்கள். எனவே இத்திரைப்படத்திற்கும் எங்கள் குழுவிற்கும் உங்கள் அன்பும், ஆதரவும் தேவை.