.
.

.

Latest Update

உலகெங்கும் அக்டோபர் 21 முதல் -பத்து எண்றதுக்குள்ள


திரைப்பட வர்த்தகத்தில் அரசாலும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இயக்குனர் முருகதாசும் இணைந்து தங்களது 10_Enradhukullaநான்காவது தயாரிப்பான ‘ பத்து எண்றதுக்குள்ள ‘ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து உள்ளனர். வருகிற அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி உலகெங்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக வெளியிட பட உள்ளது.

ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளறி உள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பரவலாக எல்லோராலும் பேசப்பட்டு வந்த நிலையில் நவராத்திரியை முன்னிட்டு இந்தப்படம் வெளி ஆவது ரசிகர்கள் இடையே பெரிதும் உற்சாகத்தை தூண்டி உள்ளது. ஜனரஞ்சகமான முறையில் அனைவரையும் கவரும் வண்ணம் படமாக்கப்பட்டு உள்ள ‘ பத்து எண்ரதுக்குள்ள ” படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் முடிவடைய உள்ளது.சமீபத்தில் வெளி வந்து வர்த்தக ரீதியாக மட்டுமின்றி , அனைவராலும் பாராட்டு பெற்ற ‘காக்க முட்டை’ பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தாரின் பெருமிதமான வெளியீடு. இவர்களோடு இயக்குனர் முருகசாஸ் இணைந்து வழங்கிய ‘ராஜா ராணி’ மற்றும் ‘எங்கேயும் எப்போதும்’ ஆகிய படங்கள் பெற்ற வெற்றியை இந்தப் படமும் பெரும் என்பது நிச்சயம்.
‘ஐ’படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு வெளி வரும் படம் என்பதால் சியான் விக்ரமின் ரசிகர்கள் இடையே இந்த படத்துக்கு அமோக வரவேற்பு இருக்கும். ‘கத்தி’ படத்துக்கு பிறகு வரும் படம் என்பதால் சமந்தாவுக்கும் இந்த படம் பெரிய படமாக அமையும்.
அக்டோபர் 21 ஆம் தேதி வெளிவர உள்ள இந்தப் படம் அனைத்து தரப்பினரையும் நிச்சயம் கவரும் என நம்பிக்கை தெரிவித்தனர் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles