.
.

.

Latest Update

ஒரு மணி நேரத்தில் நடக்கும் கதைதான் ‘கிரகணம்’ திரைப்படம்


தமிழ்ச் சினிமா எப்போதும் இளம் இயக்குநர்களால் புதுப்புது வடிவமெடுக்கும். அந்த வகையில் தற்போது உருவாகியிருக்கும் இந்த ‘கிரகணம்’ படமும் எல்லாருக்கும் தெரிந்த கதையை. புதிய கோணத்தில் சொல்லும் படம்தான்..!

இதில் நாயகர்களாக கிருஷ்ணா, சந்திரன் இருவரும் நடிக்க நந்தினி என்ற புதுமுக நாயகி அறிமுகமாகிறார். இவர்களுடன் கருணாஸ், கருணாகரன், ஜெயப்பிரகாஷ் , பாண்டி மற்றும் சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை – கே.எஸ்.சுந்தரமூர்த்தி. ஒளிப்பதிவு – ஸ்ரீசரவணன், படத் தொகுப்பு – மணிகுமரன் சங்கரா. தயாரிப்பு – கே.ஆர். பிலிம்ஸ் சார்பில் சரவணன், கார்த்திக், இணை தயாரிப்பு –சிவக்குமார், எழுத்து, இயக்கம் – இளன்.

ஒரு நாள், ஒரு இரவு என்றெல்லாம் கதைகளை சொல்லும் இன்றைய இயக்குநர்கள் மத்தியில் ஒரு மணி நேரத்தில் நடக்கும் சம்பவத்தை சொல்கிறார்கள் என்றால் அது ஆச்சர்யம்தானே..!?

இப்படத்தின் கதையைப் பற்றி இயக்குநர் இளன் கூறுகையில், “சந்திர கிரகணம் நிகழும் ஓர் நாள் இரவில் நம் கதையின் கதாபாத்திரங்கள் வாழ்விலும் இருள் சூழ்கிறது. இந்த இருள் ஒரு மணி நேரம்தான். அந்த ஒரு மணி நேரத்திற்குள் அவர்களின் வாழ்வில் என்னென்ன திருப்பங்கள் ஏற்படுகிறது என்பதை பரப்பரப்பாகவும் திகிலாகவும் சொல்லியிருக்கிறோம்…” என்றார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles