சிங்கப்பூர் அரசு சிங்கப்பூரில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 9 ஆம் தேதி வரை சர்வதேச எழுத்தாளர்கள் திருவிழாவை நடத்துகிறது.
தமிழ், சீனம், மலாய், ஜப்பான், கொரியா, ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழி எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் இவ்விழாவில் தமிழ் மொழி சார்பாக நா.முத்துக்குமார் கலந்து கொண்டு தமிழ் இலக்கியம் குறித்தும், கவிதைகளின் தற்கால போக்கு குறித்தும் உரையாற்ற இருக்கிறார்.