.
.

.

Latest Update

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் துவக்க விழா


இயக்குனர்கள் சுந்தர்.சி, அட்லீ ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய புதிய இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் காதலும் நகைசுவையும் கலந்த இப்படத்தின் கதை, திரைக்கதை வசனம் இயற்றி இயக்குகிறார். அவரது கதைக்கு உற்ற துணையாக ஒளிப்பதிவில் P C ஸ்ரீராம், இசைக்கு அனிருத்,அரங்க அமைப்புக்கு டி. முத்துராஜ், பட தொகுப்புக்கு ரூபன்,ஒலி வடிவமைப்பாளர் ஆக ஆஸ்கார் விருதுப் பெற்ற ரசூல் பூக்குட்டி, சண்டை காட்சிகளுக்காக அனல் அரசு, சிறப்பு ஒப்பனையாளராக WETA நிறுவனத்தை சார்ந்த ஷான் ஃபுட் ஆகியோர் பணியாற்ற இருக்கின்றனர்.
கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிக நடிகையர் தேர்வு நடைப் பெற்று கொண்டு இருக்கிறது.
‘ ஒரு படத்தின் உன்னதமான தொழில் நுட்ப கலைஞர் குழு படத்தின் வெற்றியை பெரிதளவு தீர்மானிக்கிறது. எனது முதல் படத்தில் இத்தகைய பிரசித்திப் பெற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் பணி புரிவது எனக்கு மிக்க பெருமை. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அவர் இதுவரை ஏற்றிராத ஒரு புதிய பாத்திர படைப்பு. இந்த படம் அவரது கலை பயணத்தில் ஒரு முக்கிய படமாக இருக்கும்.தொழில் நுட்பகலைஞர்கள் தேர்வைப் போலவே மற்ற நடிக நடிகையர் தேர்வும் மிக மிக பெரியதாக இருக்கும். காதலுக்கும் , நகைசுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்தப் படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதில் ஐயமே இல்லை. என்னுடைய நிறுவனமான 24AM STUDIOS தரமான படங்களையும் , உன்னதமான தொழில் நுட்ப கலைஞர்களையும் ஆதரித்து ஊக்குவிக்கும்’ என்று உறுதியுடன் கூறினார் தயாரிப்பாளர் ஆர் டி ராஜா.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles