தாரை தப்பட்டை, வரலக்ஷ்மியின் நடிப்பு திறமையை முழுமையாக வெளிப்படுத்த கிடைத்த ஒரு அருமையான களம்…ஒரு நடிகையாக தன் திறமையை வெளிப்படுத்த பல கோணங்கள் அமைந்த ஒரு கதாபாத்திரம்….கிடைத்த களத்தில் ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார் வரலக்ஷ்மி…ஆட்டுவித்தவர் இயக்குனர் பாலா சார் என்றாலும், ஒவ்வொரு காட்சிக்கும் வரலக்ஷ்மி தன்னை வருத்திகொண்டதை நேரில் பார்த்த அனைவருக்கும், நடிகை வரலக்ஷ்மி மேல் பெரிய மரியாதை ஏற்படுத்தியது.நிச்சயமாக தாரை தப்பட்டை திரைக்கு வரும் போது படம் பார்க்கும் எல்லோருக்கும், வரலக்ஷ்மியின் மேல் அதே மரியாதை ஏற்படுத்தும்…
அறிமுகமான சில நிமிடங்களில் பல வருடம் பழகிய நெருக்கத்தை ஏற்படுத்தும் தன்மை… மனதில் பட்டதை வெளிப்டையாக பேசும் குணம்…பாலா சார் தொடங்கி, தாரை தப்பட்டை யூனிட்டின் கடைசி நபர் வரை, எல்லோரையும் சார் போட்டு அழைக்கும் மரியாதை…எப்பேர்ப்பட்ட இறுக்கமான சூழ்நிலையிலும் அவர் கண்களுக்கு மட்டும் தெரியும் கோமாளித்தனம்… ஒரு காட்சி… பாலா சார் எதிர்பார்த்தது போல் வருவதற்காக தன்னை வருத்திகொள்ளும் அசாத்திய திறமை…. இதுதான் வரலக்ஷ்மி…