.
.

.

Latest Update

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடிகை நிக்கி கல்ராணி 3 லட்சம் நன்கொடை..!


தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

கட்டிடம் கட்டுவதற்கான அரசு அனுமதிகளும் கிடைத்துவிட்ட நிலையில் கட்டிடம் கட்டுவதற்கான நிதிக்காக நடிகர், நடிகைகள் தாமாகவே முன் வந்து நன்கொடை அளித்து வருகின்றனர்.

கட்டிடத்தில் சிறிய திருமண மண்டபத்தை கட்டுவதற்கான செலவை நடிகர் சங்கத்தின் அறங்காவலர்களின் ஒருவரான ஐசரி கணேஷூம், preview theatre கட்டும் செலவை சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தாரும் ஏற்று கொண்டுள்ளனர்.

மேலும் பழம் பெரும் நடிகை வாணிஸ்ரீ – ரூபாய் 1,55,555/-, நடிகை ராதா – ரூபாய் 1,00,000/-, நடிகை ஜனனி – ரூபாய் 40,000/-, நடிகை சத்யபிரியா – ரூபாய் 25,000/-, ஜெயசித்ரா – ரூபாய் 10,000/-, நடிகர் சங்கம் பி.ஆர்.ஒ. ஜான்சன் – ரூபாய் 60,000/- நன்கொடை அளித்துள்ளனர்.

இவர்களை தொடர்ந்து நடிகை நிக்கி கல்ராணி 3 லட்சம் ரூபாயை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட நிதிக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை அவர் நடிகர் சங்கத்தின் அலுவலகத்திற்கு நேரில் சென்று சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான நடிகர் ஸ்ரீமனிடம் வழங்கினார்.

ஏற்கனவே நடிகர் சங்கம் பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் தலா 5 கோடி ரூபாயை சங்கத்தின் கட்டிட நிதிக்கு நன்கொடையாக அளிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles