கதைகளின் கருவலம் கதாபாத்திரங்களின் கதாநாயகன் என் நண்பன் R.செல்வராஜின் கடைக்குட்டியே.’நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பு இல்லை’ஒரு ஜனரஞ்சக படம் மட்டுமல்ல உயர பறக்க துடிக்கும் இன்றைய இளைஞர்களுடை எண்ணங்களின் பிரதிபலிப்பு. இந்த சமுகத்தில் கொட்டிக்கிடக்கும் உளவியல் உண்மைகளை எந்த சமரசமின்றி திரையில் கொண்டு வந்ததற்காக ஒரு கூடை பூக்கள் உனக்காக காத்திருக்கிறது;
இந்த துணிச்சலும். சமுக சிந்தனையும் மதிப்புக்குரிய திருமணிரத்தினம் அவர்களின் மாணவன் என்பதை ஒவ்வெரு
காட்சிகளிலும் காணமுடிகிறது.நேர்த்தியான திரைக்கதை. நுணுக்கமான இயக்கம் என்று சினிமாவின் அத்தனை சிறப்பாக அமைந்துள்ளன.
இந்திய சினிமாவில் நூற்பது ஆண்டுகளாக எழுத்தளனாய என் நண்பன் R.செல்வராஜ் தவிற யாரும் ஆட்சி புரிந்ததில்லை ஏன் நண்பனோடடு இணைந்து நீ பணியாற்றியதை மிகப்பெரிய விருதாக நான் கருதுகிறேன்உன்னுடைய இந்த வெற்றிக்கு பின்னால் என் நண்பனின் மகிழ்ச்சியை காணமுடிகிறது குடும்ப நண்பன் என்ற முறையில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்.