இன்று ‘கன்னா பின்னா’ படக்குழுவினர் தங்களது படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்க கோரி சென்சார் அதிகாரி மதியழகன் அவர்களை எதிர்த்து சென்னை சாஸ்திரி பவனில் போராட்டம் நடத்த முயன்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இயக்குனர் தியா, தயாரிப்பாளர்கள் ரூபேஷ்.P, E.சிவசுப்பிரமணியன் & K.R.சீனிவாஸ் உட்பட 20 க்கும் மேற்பட்ட ‘கன்னா பின்னா’ படக்குழுவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.