.
.

.

Latest Update

ரம் திரைப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. ‘கபாலி’ டீசர் வைத்து கொண்டாடினர் படக் குழுவினர்..


ரம் திரைப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. ‘கபாலி’ டீசர் வைத்து கொண்டாடினர் படக் குழுவினர்.

உலகெங்கும் காட்டு தீ போல் வேகமாக பரவி வரவும் ‘நெருப்புடா’ ரம் திரைப் படக் குழுவினரையும் விட்டு வைக்க வில்லை. ரிஷிகேஷ், அஞ்சாதே’ நரேன், விவேக், மியா , சஞ்சிதா ஷெட்டி,அம்ஜத்,அர்ஜுன் சிதம்பரம் என ஒரு உற்சாக குவியலே குடி இருக்கும் இந்தப் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு வியாழன் அன்று நடந்தது. இடை விடாமல் 60 இரவுகள் பணியாற்றிய சோர்வு இருந்தாலும், படப்பிடிப்பு நன்றாக முடிந்து , படமும் நன்றாக வந்து இருக்கிறது என்கிற உற்சாகம் இந்த இளம் படப்பிடிப்புக்கு குழுவினருக்கு இருந்ததால் அதை கொண்டாட விரும்பினார். விவேக் சார் இருக்குமிடத்தில் ஐடியாவுக்கா பஞ்சம் . ஊரே கொண்டாட போகும் ‘கபாலி ‘ டீசரை நாமும் பார்த்து கொண்டாடலாம் என்றார்.இந்த ஐடியா நெருப்பு போல் கொண்டது. படப்பிடிப்பு குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்க தயாரிப்பாளர் விஜயராகவேந்திராவும் உடனடியாக ஒரு பெரிய ஸ்க்ரீன் ஏற்பாடு செய்து ‘கபாலி’ டீசர் பார்க்க ஏற்பாடு செய்தார். இதை பார்த்தவுடன் படப்பிடிப்பை துரிதக் காலத்தில் முடித்த மகிழ்ச்சி மேலோங்கஉற்சாக குரல் எழுப்பி ‘ரம்’ படப்பிடிப்பு குழுவினர் ‘கபாலி’ டீசருக்கு வரவேற்புக்கு கொடுத்தனர்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles