மிக சிறந்தக் கதை என அனைவராலும் பாராட்டப்படும் ‘அஞ்சல’ வருகின்ற 24ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.புதிய இயக்குனர் தங்கம் சரவணன் இயக்கத்தில், பிரபல இசை அமைப்பாளர் கோபி சுந்தர் இசை அமைக்க , விமல் ஜோடியாக நந்திதா நடிக்கும் இப்படத்தில் முக்கியக் கதா பாத்திரத்தில் நடித்து உள்ளார் பசுபதி. அரசாங்கம் சாலையை விஸ்தரிக்க முயலும் போது , அதனால் பாதிக்க படும் ஒரு பரம்பரை சொத்தான டீ கடையைக் காப்பாற்ற முயலும் ஒரு கவிதைதான் ‘அஞ்சல’ . ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற விவாதம் பரவலாக இருக்கும்போது , சரியான நேரத்தில் சரியான படமாக வருகிறது ‘அஞ்சல’. ரசிகர்களின் ரசனைக்கேற்ப ருசியான படமாக இருக்கும் ‘அஞ்சல ‘.