‘தெறி’ படத்தை அடுத்து இரண்டாவது முறையாக அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் விஜய் மீண்டும் அட்லீக்கே கால்ஷீட் கொடுத்திருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. அட்லீ படத்தை முடித்துவிட்டு அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம் விஜய். அதன் பிறகு யார் இயக்கத்தில் நடிப்பார் என்று பல இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்ட நிலையில், மீண்டும் அட்லீக்கே தன் படத்தை இயக்கும் வாய்ப்பை தந்திருக்கிறாராம் விஜய். இது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும் இந்த தகவல் உண்மை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். காரணம் மீண்டும் ஒரு சிறந்த கதையை சொல்லி கவிழ்த்து விட்டாராம். மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கு தெறி கொண்ட்டாட்டம்.