வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரேம்ஜி, சமுத்திரக்கனி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘மாஸ்’. யுவன் இசையமைத்திருக்கும் படத்துக்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
சூர்யா – வெங்கட்பிரபு இணை முடிவான உடன், இரண்டு நாயகர்கள் கொண்ட கதை ஒன்றை தெரிவித்திருக்கிறார் வெங்கட்பிரபு. அக்கதையில் நடிக்க ரவிதேஜாவிடம் பேசியிருப்பதாகவும், தெலுங்கில் ஒரே சேர படமாக பண்ணலாம் என்ற திட்டத்தையும் தெரிவித்திருக்கிறார்.
அப்படத்தின் கதையை கேட்ட சூர்யா, இப்படத்தில் எனது கதாபாத்திரம் வில்லன் வேடம் மாதிரி இருக்கிறது. இக்கதையில் அஜித், விஜய் மற்றும் மகேஷ் பாபு போன்ற நாயகர்கள் நடித்தால் மட்டுமே சரியாக வரும் என்று தெரிவித்திருக்கிறார் சூர்யா. மேலும், உங்களது பாணியில் ஒரு ஜாலியான படமாக பண்ணலாம் என்று சூர்யா தெரிவிக்க வெங்கட்பிரபு பண்ணிய கதை தான் ‘மாஸ்’.
தற்போது ‘மாஸ்’ என்கிற தலைப்பு வரிச்சலுகைக்காக ‘மாஸு என்கின்ற மாசிலாமணி’ என்று மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.