.
.

.

Latest Update

சினிமாவில் மீண்டுமொரு கார்த்திக் சிவக்குமார்…..



தினமும் வாய்ப்பு தேடினாலும் ஒரு காட்சியிலாவது தலை காட்டி விட மாட்டோமா என ஏங்குபவர்கள் ஏராளம். அப்படியிருக்க சிலருக்கு அதிர்ஷ்டம் தானாக கதவைத் தட்டும்.

இதில் ரெண்டும் கலந்த கலவை கார்த்திக் சிவக்குமார். திருப்பூர் பின்னலாடை நகரத்தில் பனியன் ஏற்றுமதியை சிறு முதலீட்டில் நடத்தி வரும் இவருக்கு, சென்னையில் சினிமா நண்பர்கள் அதிகம். தொழில் சார்ந்து சென்னைக்கு வந்து போகும்போது, அடித்தது அதிர்ஷ்டம். 

சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தில் ஒரு காட்சியில் வந்து போனவருக்கு சினிமா மீது பெருங்காதல் ஏற்பட்டது. தொடர்ந்த தேடுதலில் அடித்தது ஜாக்பாட்.

மிஷ்கின், விக்ராந்த், சுசீந்திரன்  நடிக்கும்,  ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படத்தில் நெகட்டிவ் ரோல், ‘சோம பான ரூப சுந்தரம்’ படத்தில் நெகட்டிவ் ரோல், ‘கண்ணை நம்பாதே’ என தொடர்ந்து வில்லன் வேடத்தில் ஆப்பர்ச்சூனிட்டி கன்டினியூ ஆகிறது.

“நெகட்டிவ் ரோல், கேரக்டர் ரோல், காமெடி ரோல் எது கிடைத்தாலும் பர்ஃபாமென்ஸ் பண்ண ரெடியா இருக்கேன். ஒரே ஒரு சீன் என்றாலும் மக்கள் மனசில் சிம்மாசனம் போட்டு அமரும் கேரக்டரா இருந்தா  பர்ஃபாமென்ஸ் பண்ண நான் ரெடி” என்கிறார் கார்த்திக் சிவக்குமார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles