.
.

.

Latest Update

சவாலே சமாளி திட்டமிட்ட படி நாளை உலகம் முழுவதும் வெளியாகும் ! நடிகர் அருண்பாண்டியன்


சவாலே சமாளி படத்தின் தயாரிப்பாளர்கள் அருண்பாண்டியன் மற்றும் கவிதாபாண்டியன் இருவரும் கூறியதாவது…
சவாலே சமாளி திரைப் படம் திட்டமிட்ட படி நாளை (04.09.2015) உலக முழுவதும் 170 க்கு அதிகமான திரையரங்குகளில் வெளியாகும். படத்தை திடீரென நிறுத்த முடியாது. என்னெனில் பல கோடி செலவில் சரியான திட்டமிடலுடன் படம் தயாரிக்கப் பட்டு ரிலீஸ் தேதியும் முறைப்படி அறிவிக்கப் பட்டுள்ளது. நல்ல விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது. நானே நினைத்தாலும் படத்தின் ரிலீசை நிறுத்த முடியாது. காரணம் படம் ரிலீசுக்கான அணைத்து தொழில்நுட்ப ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் படத்தை நிறுத்தினாலும் வெளிநாட்டில் படம் ரிலீஸ் ஆகும். கண்டிப்பாக திருட்டு வீ.சி.டி உள்ளிட்ட பல கடுமையான பாதிப்புகள் ஏற்படும். ஒரு தயாரிப்பாளராக எனக்கு கடுமையாக பிரச்சனைகள் ஏற்படும். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த திடீர் முடிவில் எந்த நியாயமும் இல்லை இன்னும் சொல்லப்போனால் லிங்கா படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்ததே நான்தான். அந்த வகையில் நானும் கடுமையாக பாதிக்கப் பட்டேன்.
அதை நான் இதுவரை எந்த மேடையிலும் சொன்னதில்லை. ஆனால் அவர்களாக நஷ்டத்தை ஈடுகட்டுவதாக சொன்னார்கள் ஆனால் அதையும் செய்யவில்லை. செங்கல்பட்டு என்ற ஒரு குறிப்பிட்ட எரியாவிற்காக ஒட்டு மொத்த தமிழகம் முழுவதும் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்தது தவறானது என்று கூறினார்கள்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles