விஜய் ஒவ்வொரு படம் வெளியாகும் போது பல சர்ச்சைகள் பார்த்து தான் வருது அந்த வகையில் புலிக்கு இது வரை எந்த பிரச்னையும் வரலை என்று சந்தோஷ பட்டால் இல்லை அது எப்படி விடுவோம் என்று ஆரம்பித்து விட்டனர் அமாம் நேற்று ட்விட்டர்ல புது கதையை கொல்லுதி போட்டு உள்ளார்கள் …அதற்கு இடையே படத்தின் கதை சில இணையத்தில் இது ஹாலிவுட் படத்தின் கதை என்று சொல்லுகிறார்கள்….
ஊரு ரெண்டு பட்டால் கூதாடிக்கி கொண்டாட்டம் என்பார்கள் விஜய் அஜித் ரசிகர்கள் சண்டையால் மட்டரவர்களுக்கு நல்ல தீனி ஆகிவிட்டது ஆமாம் இவர்கள் (ரசிகர்கள்)சண்டையால் பலருக்கு அது சாதகமாக பயன் படுத்தி கொள்ளகிறார்கள் ஒவ்வொரு படம் வரும் போதும் விஜய் மற்றும் அஜித் பல பிரச்சனைகளில் மாட்டி கொள்ளகிறார்கள் ரசிகர்களே இதனால் உங்கள் தலைவன் படம் பாதிக்குது நீங்கள் உங்கள் தலைவனுக்கு சாதகம் என்று எதிர் அணிக்கு பாதகம் உண்டு பண்ண வேண்டும் என்று உங்களுக்கு தெரியாமல் செய்குரிகள் இதனால் உங்கள் தலைவன் படமும் அதை பல கோடி கடன் வாங்கி தயாரிக்கும் தயாரிபாலருகும் தான் இனி மேல் யோசித்து செய்யுங்கள் உங்கள் தலைவன் படத்தின் கதை வெளியாகிவிட்டது என்ன செய்வது சொல்லுங்கள் இனியாவது நல்லது செய்ய பாருங்க ….
தமிழ் சினிமாவில் பெரிய ஹிரோக்களின் படங்கள் பூஜை போட்டதிலிருந்தே அந்த படத்தின் கதை சம்பந்தமான பல நல்ல கட்டு கதைகள் கோடம்பாக்கத்தில் சுற்றி வலம் வந்து கொண்டேயிருக்கும். இதில் தற்போது கோடம்பாக்கத்தில் எட்டு போட்டுக் கொண்டிருக்கும் படம் புலி.
விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, பிரபு, சுதீப் என்று தென்னிந்தியாவின் பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் இப்படத்தை இயக்கியிருக்கிறார் சிம்புதேவன். தற்போது இப்படத்தின் கதை இதுதான் என்று ஒரு செய்தி இணையத்தில் பரவிக் கொண்டிருக்கிறது.
அதாவது, 500 வருடங்களுக்கு முன் நடந்த அரசர்கள் ஆட்சியில் கதை தொடங்குகிறதாம். பேரரசியாக ஸ்ரீதேவி நடித்திருக்கிறார் இவரின் படைத்தளபதியாக சுதீப் நடிக்க இவர் ஸ்ரீதேவியை சிறைபிடித்து வைத்து அந்த நாட்டின் அரசனாக மாறுகிறார். ஸ்ரீதேவியின் நலம் விரும்பிகள் சுதீப்பை அடக்கி ஸ்ரீதேவியை மீண்டும் அரசியாக்க ஒரு வல்லவன் நமக்கு தேவை என்று எண்ணுகிறார்கள். விஜய் தான் அந்த வல்லவன் என்று தெரிந்ததும் அவரை நாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். மலைவாழ் மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் விஜய்க்கு விருப்பமில்லாமல் நாட்டுக்குள் போகிறார். அங்கு நடக்கும் கொடுமைகளை பார்த்து முழு மனதோடு ஸ்ரீதேவியை மீட்க போராடுகிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் க்ளைமேக்ஸ் என்று புலி படத்தின் கதை வெளியாகியுள்ளது.
ஸ்ரீதேவியை மீட்ட பின்னர் சுதீப்பை சிறையில் அடைக்கிறார் ஸ்ரீதேவி. விஜய்யையும் சிறையில் அடைத்துவிடுகிறார். எதற்காக விஜய்யை சிறையில் அடைக்கிறார், பின்னணியில் என்ன நடந்தது என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையில் கூறியிருக்கிறாராம் சிம்புதேவன்.
எது எப்படியிருந்தா என்ன புலி எப்படியும் பாய்ந்து அடிக்கப்போவது உறுதி என்று மட்டும் நன்றாக தெரிகிறது.