பிரம்மாண்டம் என்றால் அது தமிழ் சினிமாவில் இயக்குநர் ஷங்கர் மட்டுமே, இவரின் படங்களில் வரும் காட்சிகளுக்காக இவர் அதிகம் மெனக்கெட்டு அதனை பிரம்மாண்டமாக காண்பித்து நம்மை வியப்பில் ஆழ்த்துவார். சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஐ திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்கியிருந்த ஷங்கர் தற்போது அவரின் அடுத்த பட வேலைகளில் பிசியாக இறங்கிவிட்டார்.
அடுத்த வருடம் தொடங்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் ஹிரோவாக ரஜினியும் நடிக்கப்போகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். எந்திரன் படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் ரஜினியும், ஷங்கரும் இணைகிறார்கள். கத்தி படத்தினை தொடர்ந்து லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது சுமார் 300 கோடி பட்ஜெட்டில் இதுவரை இல்லாதளவுக்கு ஹாலிவுட் படம் மாதிரி இப்படத்தை உருவாக்கப்போகிறாராம் ஹங்கர். மேலும் ரஜினிக்கு வில்லனாக யாரை போடுவது என்று குழம்பிக் கொண்டிருந்த ஷங்கர், அவரின் முதல் சாய்ஸாக சியான் விக்ரமைத்தான் வைத்திருந்தார், ஆனால் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு பாலிவுட் சூப்பர் ஹிரோவான ஷாருக் கான் நடிக்கப்போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யவிருக்கிறார்களாம்.