அக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம் “லட்சுமி பாம்” திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியீடு ! கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழில் பல முன்னணி நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீசாகின்றன .ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து 2011ம் ஆண்டில் ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் “காஞ்சனா” . காஞ்சனா படத்தை ஹிந்தியில் “லட்சுமி பாம்” பெயரில் அக்ஷய்குமார் […]
சாத்தான் குளம் சம்பவம் பற்றி – இயக்குனர் பாரதிராஜா அறிக்கை
பேரிடர் காலங்களைக் கையாளும் தமிழக அரசுக்கு… நேரம் காலம் பாராமல் தன்னுயிர் பற்றி கவலைப்படாமல் சிறப்பான பணியை முன்வைக்கும் முதல்வர் மற்றும் அதிகாரிகளை நன்றியோடு பார்க்கும் அதேவேளையில், இவ்வரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் ஈன காரியங்களை சில அதிகாரிகள் தங்கள் வரம்பு மீறி செய்துவிடுகிறார்கள். காத்துநிற்கும் காவல் அதிகாரிகள் மத்தியில் அப்பாவி மக்களை வேட்டையாடும் சில ஓநாய்களும் கலந்துவிடுவது ஒட்டுமொத்த காவல்துறையையே பழிச்சொல்லிற்கு ஆளாக்கிவிடுகிறது.. விரும்பத்தகாமல் நடந்துவிடும் சில சம்பவங்களை, சமூகப் பொறுப்புடன் சுட்டிக்காட்ட நாங்கள் கடமை பட்டுள்ளோம்.. […]
தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்: சென்னை புதிய ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்: சென்னை, மதுரை காவல் ஆணையர்கள் மாற்றம்: புதிய ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் 🔹 சென்னை காவல் ஆணையர் ஏ.கே,விஸ்வநாதன் செயலாக்கம் ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார் 🔹 செயலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் 🔹 சீருடைப்பணியாளர் தேர்வாணைய டிஜிபி சுனில்குமார் மாநில மனித உரிமை ஆணைய டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார் 🔹 மதுரை காவல் ஆணையராக பதவி வகிக்கும் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஏடிஜிபி தொழில் நுட்பப்பிரிவு ஏடிஜிபியாக […]
மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்ஷி அகர்வால்
டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்ஷி அகர்வால்சில நாட்களுக்கு முன் நடிகை சாக்ஷி அகர்வால், தன்னை டிக்டாக்லிருந்து விலக்கி கொண்டு சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். நேற்று மத்திய அரசு டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை விதித்திருப்பதை அறிந்து தனது நன்றியையும் […]
கொரோனா விளம்பரத்தில் நடித்த தேவயானி
“இந்த நெருக்கடியான கொரோனா காலத்தில் எங்களைப் போன்ற கலைஞர்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொழுது அது மிக வேகமாக அனைவரிடமும் சென்றடைகிறது. இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த தமிழக முதல்வருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த விளம்பரப் படத்தில் தேசிய விருதுபெற்ற ஆடுகளம் ஜெயபாலன் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஒரு தந்தை மகளுக்கான பாசப்பிணைப்போடு இந்த விளம்பரம் அமைந்திருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு “பாரதி” படத்தில் எனக்கு மருமகனாக நடித்து இப்போது “கட்டில்” படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இ.வி.கணேஷ்பாபு இந்த […]
சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும் – கவிஞர் வைரமுத்து
சாத்தான் குளத்தில் இறந்துபோன ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இருவரும் வெறும் வணிகர்கள் அல்லர்; மனிதர்கள் மற்றும் தந்தை – மகன் என்ற உறவுக்காரர்கள். அதனால்தான் இது தமிழகத் துயரம் என்பதைத் தாண்டி இந்தியத் துயரமாகிவிட்டது. பெருமைக்கும் பேருழைப்புக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டுக் காவல்துறையைச் சிறுமைக்கு உள்ளாக்கிவிட்டது சிந்தி முடித்த சிவப்பு ரத்தம். சிறைக் கோட்டத்துக்குள் எத்துணையோ தனி மரணங்கள் நேர்ந்ததுண்டு. ஆனால், ஒரு குடும்பத்தின் தகப்பனும் மகனும் ஒரே நேரத்தில் இறந்துபோன சம்பவம் இதயத்தின் மத்தியில் இடிவிழச் […]
இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் அடுத்த படைப்பு “நேக்டு நங்கா நக்னம்”
கரோனாவால் திரைத்துரைக்கு ஏற்பட்டுள்ள தடைகளை பொருட்படுத்தாமல், ராம்கோபால் வர்மா தொடர்ந்து தன்னால் முடிந்த அளவு சிறப்பான ட்ரெண்ட் செட்டிங் படங்களை உருவாக்கி அவற்றை வெளியிட்டும் வருகிறார். எளிதில் துவண்டுவிடாத மனம் கொண்ட ராம்கோபால் வர்மா, இந்த கரோனா அச்சுறுத்தல் ஏற்படுத்திய தடைகளின் இடையே படங்களை வெளியிடுவதில் இயக்குநர்களுக்கு ஒரு வழியை கண்டறிந்துள்ளார். சமீபத்தில் வெளியான அவரது க்ளைமாக்ஸ் படம் ஷ்ரேயாஸ் ஈடியில் முதன்முறையாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ATT (Any Time Theatre) தளம் ஷ்ரேயாஸ் குழுவால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஏடிடி தளம், வெறும் 50,000 பார்வைகளை மட்டுமே எதிர்பார்த்தது, ஆனால் பிரம்மாணடமான 2,75,000 லாகின்களும், 1,68,596 கட்டணம் செலுத்திய பார்வைகளும் படம் வெளியான 12 மணி நேரத்தில் கிடைத்தன. ஒட்டுமொத்தமாக 2,89,565 பார்வைகள் கிடைத்துள்ளது. க்ளைமாக்ஸ் படத்தின் பெரும்வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமான நேக்டு நங்கா நக்னம் படத்தை இதே தளத்தில வரும் ஜூன் 27 அன்று […]
ஹீரோவாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்
நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது தம்பி எல்வின் பிறந்த நாளான இன்று (21.06.2020 ) அவரை ஆச்சரியப்படுத்தும் விதமாகஅறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. நண்பர்களுக்கு வணக்கம் ..இன்று என் தம்பியின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் நான் அவனை ஆச்சரியப்படுத்த நினைப்பேன் அதே போல் இந்த பிறந்த நாளிலும் அவனுக்கான பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்கான அறிவிப்பு இது. அவரது கனவே தான் ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான். அது இப்போது நிறைவேற போகிறது. ஆம் நாங்கள் […]
100 ஊழியர்களுக்கு மூன்று மாதசம்பளத்தை முன்பணமாக கொடுத்த நடிகர்
டார்லிங் – 2′ விதிமதி உல்டா போன்ற படங்களை தனது ரைட் மீடியா ஒர்க்ஸ் நிறுவத்தின் மூலம்தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் ரமீஸ்ராஜா இவர் தன்னுடைய நிறுவனத்தில்( ரைட் ரூப்&அல்லய்டு புரொடக்ட்ஸ் (பி) லிமிடெட்) பணியாற்றிக் கொண்டிருக்கும் 100 க்கும் மேற்பட்ட ஊழியர் களுக்கு இந்த லாக் டவுன்சூழ் நிலையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் அவர் களுக்குஉதவுகின்ற வகையில்3 மாத சம்பளத்தை முன்பாகவே கொடுத்து உதவியிருக்கிறார். இவர் நடித்தடார் லிங் – 2 படத்தை கிரீன் ஸ்டுடியோ வெளியிட்டது இதில் […]
கங்கை அமரனை கெளரவிக்கும் டோக்கியோ தமிழ்ச்சங்கம் மற்றும் மலேசியா தமிழ் எக்ஸ்பேட்ஸ் மன்றம்
உலக இசை தினத்தை முன்னிட்டு, உலகத் தமிழ் சங்கங்களுடன் இணைந்து இசையமைப்பாளர் கங்கை அமரனை கெளரவிக்கும் டோக்கியோ தமிழ்ச்சங்கம் மற்றும் மலேசியா தமிழ் எக்ஸ்பேட்ஸ் மன்றம் அன்னக்கிளியில் இளையராஜாவுடன் 1975-ல் துவங்கிய இசைப்பயணம், பாடலாசிரியராக 2500-க்கு மேற்பட்ட பாடல்கள், இயக்குநராக 17 படங்கள், இசையமைப்பாளராக 127 படங்கள், நடிகராக 50-க்கு மேற்பட்ட படங்கள், பாடகராக 300-க்கும் மேற்பட்ட படங்கள், தயாரிப்பாளராக 4 படங்களில் பணியாற்றிய கங்கை அமரனை கெளரவிக்கும் பொருட்டு உலக இசை தினமான வரும் ஜூன் […]