Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

Month: January 2016

மிரட்டலுக்கு தயாரான ‘அரண்மனை 2‘ படத்தை பற்றி – இயக்குனர் சுந்தர்.சி…

கலக்கல் கதை இருக்கும், கலகலப்பான திரைக்கதை இருக்கும், சிரிக்க காமெடி இருக்கும், சீரியஸ் செண்டிமெண்ட் இருக்கும். இப்படி இருந்த சுந்தர்.சி படத்தின் ஃபார்முலாவில் பிரதான அம்சமாக சேர்ந்துவிட்டது பேய். ‘அரண்மனை’ வெற்றியை தொடர்ந்து மிரட்ட வரும் ‘அரண்மனை 2’வை பார்க்க பேய் மீது விழி வைத்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். அதன் முன்னோட்டமாக படத்தின் இயக்குநர் சுந்தர்.சியையும் நடித்துள்ள நட்சத்திரங்களையும் ஒன்றிணைந்து பட அனுபவத்தை பகிர்ந்து கொண்டதிலிருந்து… ‘அரண்மனை’ இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் எப்படி வந்தது? சுந்தர்.சியிடம் […]

போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளருக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை!

‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்பட இயக்குநர் கு.கணேசன் மற்றும் தயாரிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை! சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொடூரமாகச் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படத்தின் இயக்குநர் கு.கணேசன் மற்று தயாரிப்பாளர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை(சம்மன்) அனுப்பியுள்ளது. இசைப்பிரியாவின் தாய் மற்றும் சகோதரி சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில் இவ் அழைப்பாணையினை சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பியுள்ளது. இசைப்பிரியா குடும்பத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் […]

முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாகி வரும் “தொல்லைக்காட்சி”

“தொல்லைக்காட்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பரபரப்பாக நடந்து வருகிறது. அஸ்வின் கதாநாயகனாக நடிக்க, ஜனனி கதாநாயகியாக நடிக்க, மனோபாலா, மயில்சாமி, சுப்பு அருணாச்சலம், ஆதவன் மற்றும் பல முன்னனி நட்சத்திரங்கள் நடிப்பில் இது ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாகி வருகிறது. நா.முத்துகுமார் வரிகளில் தரண் இசையமைக்கிறார். A.R.முருகதாஸ் மற்றும் லிங்குசாமின் உதவி இயக்குநர் M.சாதிக் கான் இப்படத்தை இயக்குகிறார். கயலாலயா நிறுவனம் மூலம் பாலாசெந்தில் ராஜா இத்திரைப்படைத்தை தயாரிக்கிறார்.

ரஞ்சித் மேனன் இயக்கத்தில் “ அன்பென்றாலே அம்மா “ இசை வீடியோ ஆல்பம்

விக்ரமன் இயக்கத்தில் “ நினைத்தது யாரோ “ படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ரஞ்சித்மேனன். இவரது இயக்கத்தில் “ அன்பென்றாலே அம்மா “ என்ற இசை வீடியோ ஆல்பம் உருவாகி உள்ளது. இந்த வீடியோ ஆல்பத்தில் ஜரீனா வஹாப் அம்மாவாக நடித்திருக்கிறார். ஜரீனா வஹாப் எம்.ஜி.ஆருடன் நவரத்தினம் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர்.அத்துடன் கமலுடன் “ விஸ்வரூபம், சூர்யாவுடன் ரத்த சரித்திரம் போன்ற படங்களில் நடித்தவர். மற்றும் ஜிகினா படநாயகன் ஆன்சன், உலக புகழ்பெற்ற மாடல் அழகி ஸ்ருதி […]

கோலிவுட், பாலிவுட்டை அடுத்து ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் நடிகர் “தனுஷ்”…

நடிகர் தனுஷ் அவர்களின் தனிச்சிறப்புடைய முதல் ஹாலிவுட் படத்தை பற்றி அவர் பகிர்ந்துகொள்வது , முழு நீள ஹாலிவுட் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியையும் , உற்சாகத்தையும் தந்துள்ளது. நான் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சரியாக இருக்கும் என்பது இயக்குநர் மர்ஜோன் சட்ராபி அவர்களின் கணிப்பு. இப்படம் என்னிடமிருந்து வெவ்வேறு விதமான அமசங்கள்கொண்ட கதாபாத்திரங்களை வெளிக்கொண்டு வரும் ஓர் பயணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறன். எப்போதும் நான் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கும் சந்திக்கும் சவால்களுக்கும் எனக்கு […]

ரஜினிக்கு உயிர் கொடுத்ததே ரசிகர்கள் தான் – ரஜினியின் நெருங்கிய நண்பர் ராஜ்பகதூர் பேச்சு

ரஜினி ரசிகர்களின் சார்பில் ‘மலரட்டும் மனித நேயம்’ என்கிற பெயரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று வேலூர் மாவட்டம் சோளிங்கரில் நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள் நற்பணி மன்றம் செய்திருந்தது. பகல் முழுதும் தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ரசிகர்கள் வந்தவண்ணம் இருந்தனர். மாலையில் விழாவில் சங்கமித்துக் கூடினர். அரசியல் கட்சி மாநாடு போல பிரமாண்ட கட்அவுட் , மாபெரும் மேடை ,பேனர்கள் , ஆயிரக்கணக்கான ரசிகர்கள் என சோளிங்கரே குலுங்கியது. மாலையில் […]

Back To Top
CLOSE
CLOSE