பணத்தை வைத்து பெரும் பின்புலத்துடன் பணம் சோ்த்துக்கொண்டிருக்கும் அதிகாரவர்க்கத்திடம் தங்களின் ஒட்டுமொத்த வாழ்கையையும் ஒப்படைத்துவிட்டு,அவர்களிடமிருந்து அன்பையும் நம்பிக்கையையும் எதிர்பார்த்து காத்திருக்கும் எளிய மனிதர்களை பற்றிய கதையே பொது நலன் கருதி. இங்கே பொதுநலன் என்ற பெயரை குறியீடாய் வைத்து நடந்துகொண்டிருக்கும் அத்தனை செயல்களுக்கும் காரணமாய் இருப்பது அதிகாரவர்க்கத்தின் சுயநலன்தான்,காலம் காலமாக ஒரு நம்பிக்கையை மக்களிடம் திணிப்பது,பின்பு அதை உண்மை என நம்பவைப்பதற்காக அவர்களையும், அவர்களின் நிறுவனத்தையும் பொது சந்தையில் விளம்பரப்படுத்தி, பிரம்மாண்டாமாய் பிரபலபடுத்திக்கொண்டு, அதன் பின்பு அவர்களை […]
“தீரன் அதிகாரம் ஒன்று” முற்றிலும் புதுமையான போலீஸ் படமாக இருக்கும் – கார்த்தி
தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பற்றி கார்த்தி :- நம்ம எல்லாரும் போலீசை சூப்பர்மேன் போன்றும் , வேற்று கிரகத்தில் இருந்து இறங்கிவந்தவர்கள் போன்றும் பார்க்கிறோம். நமது வீட்டில் அண்ணனோ , தம்பியோ அல்லது நண்பர்களோ போலீசாக இருப்பார்கள். போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர் தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். போலீஸ் அதிகார்கள் எங்கிருந்து வருகிறார்கள். என்ன மாதிரியான குடும்ப சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள் என்ற விஷயம் தான் அவர்களை ஒரு வகையான போலீஸ் […]
ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து கட்டிய “ஸ்ரீ பாபாஜி தியான நிலையம்”
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஆதரவு மற்றும் உதவியுடன் அவரின் நண்பர்கள் திரு. V.S.ஹரி, திரு. V.D.மூர்த்தி, திரு. விஸ்வநாதன் (வழக்கறிஞர்), திரு. ஸ்ரீதர் ராவ், திரு. திலீபன் (டாக்டர்), திரு. வைத்தீஸ்வரன் (மும்பை) ஆகியோர் இணைந்து ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கும் தியானம் செய்வதற்க்கும் உதவும் வகையில் “ஸ்ரீ பாபாஜி தியான நிலையம்” கட்டியுள்ளனர். இந்தத் தியான நிலையத்தை, மஹா ஸ்ரீ பாபாஜி தியானம் செய்யும் இடத்திற்குச் சென்று பூஜை செய்து பின்பு இக்கட்டிடத்தின் கிரஹபிரவேச […]
குழந்தைகளுக்களுடன் சிறுவர்கள் தினத்தை கொண்டாடிய ஏமாலி படக்குழு
லதா புரோடக்ஷன்ஸ் சார்பாக M.லதா தயாரிப்பில் VZ துரை இயக்கத்தில் சமுத்திரகனி, புதுமுக நாயகன் சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷினி நடிப்பில் உருவாகி வரும் படம் “ஏமாலி”. வில்லிவாக்கத்தில் உள்ள நல்மனம் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுடன் ஏமாலி படத்தின் நாயகன் சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷினி ஆகியோர் இன்று சிறுவர்கள் தினம் கொண்டாடினார்கள். மேலும் அங்குள்ள குழந்தைகளுக்கு பணஉதவியும், இனிப்பு பண்டங்களும் கொடுத்தனர்.
சுவாரஸ்யமான விளம்பர யுக்தியை கையாளும் விஜய் ஆண்டனி
புதுமைக்கும் சுவாரஸ்யமான விஷயங்களுக்கும் பெயர் போனவர் விஜய் ஆண்டனியும் அவரது படங்களும். அவரது ‘சைத்தான்’ படத்தின் முதல் பத்து நிமிடங்களை பட ரிலீசுக்கு முன்பே வெளியிட்டு புது விளம்பர யுக்தியை கையாண்டு வெற்றிபெற்றவர் விஜய் ஆண்டனி. அவரது அடுத்த படமான ‘அண்ணாதுரை’ யில் அவருக்கு ஜோடியாக டயானா சம்பிகா மற்றும் மஹிமா நடித்துள்ளனர். இப்படத்தை G ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா நவம்பர் 15 ஆம் தேதி கோலாகலமாக நடக்கவுள்ளது. ‘அண்ணாதுரை’ படத்திலும் […]
குழந்தைகளோடு “ குழந்தைகள் தின “ விழாவை கொண்டாடிய “ பிக்பாஸ் “ வையாபுரி !
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகர் வையாபுரிக்கு அனைவரிடமும் நல்ல வரவேற்பு உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரை ரசிக்காத ஆளே இல்லை எனலாம். நடிகர் வையாபுரி திருவாரூரில் உள்ள “ நியூ பாரத் மேல்நிலை பள்ளி “ 25வது ஆண்டு விழா மற்றும் குழந்தைகள் தின விழா சிறப்பு நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு குழந்தைகளோடு உரையாடினார். விழாவில் குழந்தைகள் நடிகர் வையாபுரியிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் அடிக்கடி பேசும் “ காலையானால் ஈ தொல்லை […]
இன்றைய ராசி பலன்கள் – 15.11.2017
15.11.2017 புதன்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 29ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து(தேய்பிறை) துவாதசி திதி மதியம் 2.47 மணி வரை பின் திரயோதசி திதி. ஹஸ்தம் நட்சத்திரம் மதியம் 3.49 மணி வரை பின் சித்திரை நட்சத்திரம். மரண யோகம் மதிய 3.49 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- காலை 12 முதல் 1.30 மணி வரை. எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை நல்லநேரம்- இரவு 6 […]
நன்னம்பிக்கை நாயகி ,தன்னம்பிக்கை தமிழச்சி ”ஷாதிகா ”
சினிமாவுக்கு வந்து வெற்றி பெறுபவர்களில் இரு வகையினர் உண்டு. திடுதிப்பென ஒரே படம் மூலம் உயரே செல்பவர்கள் ஒரு ரகம். படிப்படியாக மேலேறி உயரம் செல்பவர்கள் மற்றொரு ரகம். இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் தான் நடிகை ஷாதிகா. அண்மையில் வெளியாகியுள்ள சுசீந்திரனின் ‘நெஞ்சில் துணி விருந்தால்’ படத்தில் நாயகன் சந்தீப்பின் தங்கையும் விக்ராந்தின் காதலியுமான அனு பாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் இந்த ஷாதிகா. படத்தின் கதாநாயகி ஷாதிகா இல்லையென்றாலும் கதையில் கவனம் குவியும் கதாபாத்திரத்தில் வந்திருப்பவர் […]
தன் தாய் மண்ணின் கலாச்சாரம், பண்பாட்டை பற்றிய ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் ரசூல் பூக்குட்டி
பால்ம்ஸ்டோன் மல்ட்டிமீடியா ராஜீவ் பனகல் & பிரசாத் பிரபாகர் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஆஸ்கர் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி முதல் முறையாக நடிகர் அவதாரம் எடுத்து, கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘ஒரு கதை சொல்லட்டுமா’. பிரசாத் பிரபாகர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைரமுத்துவின் வைர வரிகளுக்கு ராகுல்ராஜ் இசையமைத்திருக்கிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் […]
மால்களில் சோதனை என்ற பெயரில் தடவிப் பார்ப்பது தர்ம சங்கடமாய் உள்ளது! – அபி சரவணன் வேதனை!
சென்னையில் உள்ள மால்களில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் தடவிப் பார்ப்பது தர்ம சங்கடமாய் உள்ளது என இளம் நடிகர் ‘அபி சரவணன்’ கூறியுள்ளார். குட்டிப்புலி, கேரள நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அபி சரவணன். ஜல்லிக்கட்டு, விவசாயிகள் போராட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்று, தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார். மால்களில் நடக்கும் பாதுகாப்பு சோதனை குறித்து இவர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “மால் திரையரங்குகளில் சோதனை என்ற பெயரில் செக்யூரிட்டிகள் தடவுவது தர்ம […]