வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் […]
“நயன்தாராவுக்கு தாமதமாக கிடைத்தது எனக்கு வெகு சீக்கிரமே தேடிவந்தது” ; ஸ்ரீ பிரியங்கா பரவசம்
நாயகி ஸ்ரீ பிரியங்கா பேசும்போது, “நிறைய போராட்டங்களுக்கு பிறகு மிக மிக அவசரம் படத்தின் மூலம் மிகவும் துணிச்சலான தனி ஒரு பெண்ணாக பெண் சிங்கமாக இன்று நான் நின்றிருக்கிறேன். அதற்கு சுரேஷ் காமாட்சி சாருக்குத்தான் சொல்ல வேண்டும். எல்லோரும் ஏன் பெரிய படங்களில் நடிப்பதில்லை என கேட்கிறார்கள்.. இங்கே நிறைய பேருக்கு இந்த பெண் கதாநாயகியாக ஒரு முழுநீள படத்தையும் தாங்கிப் பிடிப்பாரா என்கிற சந்தேகம் இருக்கிறது.. ஆனால் என்னால் முடியும். தமிழ் பெண்ணான எனக்கு […]
Sagaa Movie Stills
Peranbu Premiere Show Stills
Sarvam Thaalamayam Movie Stills
அகோரியாக நடிக்கும் அனுபவம் ஜாக்கிஷெராப் பேட்டி
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கும் பாண்டி முனி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. படப்பிடிப்பில் அகோரி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஜாக்கி ஷெராப் .. சாதாரண நடிகர்கள் கூட தன்னை மிக உயர்ந்தவர்களாக காட்டிக் கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் மிக உயர்ந்த இடத்தில் மதிக்கக் கூடிய நிலையில் இருக்கும் ஜாக்கி சாதாரண மனிதனாக எல்லோருடனும் பழகிக் கொண்டிருந்தது ஆச்சர்யம் தான். எல்லோருடனும் செல்பி எடுத்துக் கொண்டிருந்த அவரை மடக்கி […]
மலையாள சினிமாவிற்கு போகும் நடிகர் கிருஷ்ணா
திறமையான நடிகர்கள் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் தன்மை கொண்டது மலையாள சினிமா. வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் அனைவருக்கும் சவாலாகவும் பிரமிப்பாகவும் இருப்பதால் அதன் மீது தனி கண்னே வைத்துள்ளனர். வளர்ந்துவரும் கலைஞர்களையும் திறமையான நடிகர்களையும் இணைத்துக்கொள்ளும் மலையாள சினிமாவிற்கு அடுத்த வரவாக , தன் இளமை துள்ளும் நடிப்பால், அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுக்கும் நடிகர் கிருஷ்னா இணையவுள்ளார். மின்னல் வேகத்தில், தனது அடுத்த படமாக மலையாளத்தில் “PICCASSO” என்ற படத்தின் மூலம் கேரளத்தில் கால் […]
தமிழ் சினிமாவில் நம்பிக்கையோடு சேர தயாராகயிருக்கிறது “ரீல்”.
கதையில் இருக்கும் கதாபாத்திரங்களும் , அதன் தன்மையுமே ஒரு ரொமான்டிக் படத்தின் தரத்தை தீர்மானிக்கிறது. குறிப்பாக தேர்ந்த நடிகர்கள் மட்டுமல்லாமல், அறிமுககங்களையும் பயன்பத்திக்கொள்ளும் திறமையே இப்படங்களின் தனித்துவம் என்று கூறலாம். கதாபாத்திரங்களின் வலிமையை உணர்த்தும் திரைப்படங்களை தமிழ் சினிமா நிறைய கண்டுள்ளது . இத்தகைய காதல் திரைப்படங்களை நிலையாக கொடுத்துவரும் தமிழ் சினிமாவின் வரிசையில் , நம்பிக்கையோடு சேர தயாராகயிருக்கிறது “ரீல்”. “காதல் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு புதியவை இல்லையென்றாலும், அதன் வடிவமைப்பே அவற்றை தனித்து காட்டுகிறது . […]