விமல், ‘புன்னகை பூ’ கீதா, சமுத்திரக்கனி நடிக்கும் ‘காவல்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பேசிய அறிமுக இயக்குநர் நாகேந்திரன் இந்தப் படத்தின் கதைக் கரு பற்றி விரிவாகவே பேசினார். தந்தையோ, தாயோ அரசு உயரதிகாரியாக இருந்தால் அந்தப் பதவியின் அதிகாரத்தை அவர்களின் பிள்ளைகள் முறைகேடாக தங்களுக்குச் சாதகமாக தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான்..!தலைமை ஆசிரியர் பிள்ளையில் இருந்து மந்திரி மகன் வரை அனைத்து தரப்பிலும் அதிகார துஷ்பிரயோகம் நடக்குது […]