நாகை,தஞ்சை,திருச்சி,கடலூர்,காரைக்கால் மற்றும் புதுவையைச் சேர்ந்த ரோட்டரி சங்கங்களின் பிரம்மாண்ட மாநாடு மகாபலிபுரத்தில் நடைபெற்றது. சனிக்கிழமையன்று நடந்த நிகழ்ச்சியில் எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ‘வலிமை’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். விழாவில் கபிலன்வைரமுத்து ஆற்றிய உரையின் சுருக்கம் கீழ் வருமாறு: ”தகவல்யுகத்தின் மிகப்பெரிய சவால் உண்மைத் தகவலை அறிவது. சொல்லப்படுகிற செய்திகளில் இருந்து சொல்லப்படாத செய்திகளை புரிந்துகொள்ள ஒரு பகுத்தறிவு வலிமை தேவைப்படுகிறது. பன்னாட்டு ஊடகங்களும் வணிக அரசியலும் நமக்கு முன்னால் தோண்டிப்போட்டிருக்கும் பள்ளங்களில் விழுந்து […]