டிஜிட்டல் மயமான உலகத்தின் இந்திய பெருமைகளான திரு.சுந்தர் பிச்சை கூகுளின் தலைமையேற்று நிற்கிறார். அதோடு இன்று தொடர்பு கொள்ளுதலின் உச்சமான கண்டுபிடிப்பாக திகழ்கிறது இமெயில். அதைக் கண்டுபிடித்து இந்தியப் பெருமையாக தமிழ்ப்பெருமகனாக இருப்பவர் டாக்டர்.திரு. V.A. சிவா அய்யாதுரை பி.எச்.டி. அவர்கள், இமெயிலின் தந்தை டாக்டர்.V.A.சிவா அய்யாதுரை கலந்து கொண்ட ”சுவாசம் விருதுகள் 2015” விழா காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமையேற்று சிறப்புரை வழங் கினார் டாக்டர் சிவா அய்யாதுரை. […]