ஏதாவது ஒன்றின் மீது முழு நம்பிக்கையையும் வைத்து விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம். நடிகர் அதர்வா முரளியை இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம். இமைக்கா நொடிகள் படத்தை பணம் வாங்கிக் கொண்டு நடிக்கும் வெறும் ஒரு படமாக மட்டும் பார்க்காமல் படத்தின் அத்தனை நிலைகளிலும் உறுதியாக அதனோடு நின்றிருக்கிறார். கதை உருவாக்கம், படம் ரிலீஸ் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது வரை அதர்வாவின் ஈடுபாட்டை பற்றி சொன்னால் மிகையாகாது. படம் உருவாகும் முன்பே அதை அவர் தீவிரமாக […]