இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கே விருது இந்த ஆண்டு பிரபல மூத்த தெலுங்கு திரைப்பட இயக்குநரான கே.விஸ்வநாத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று டெல்லியில் மத்திய அரசு அறிவித்தது. காசிநாதுனி விஸ்வநாத் என்ற இயற்பெயருடைய கே.விஸ்வநாத் ஆந்திராவில் 1930-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதியன்று கிருஷ்ணா நதிக்கரையோரம் இருக்கும் பேடபுள்ளிவாறு என்கிற குக்கிராமத்தில் பிறந்தவர். மிக இளம் வயதிலேயே சினிமா துறைக்குள் நுழைந்தவர், ஆரம்பத்தில் சென்னையில் இருந்த ஒரு ரிக்கார்டிங் […]