‘பாகுபலி’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் அதன் இயக்குநர் ராஜமெளலி பேசும்போது தான் சென்னையின் மைந்தன் என்பதை சொல்லி உணர்ச்சிவசப்பட்டார். “மும்பை உள்ளிட்ட பல ஊர்களில் மேடை ஏறி பேசியிருக்கிறேன். ஆனால், சென்னையில் பேசும்போது மட்டும்தான் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கும். ஏனென்றால், நான் பிறந்தது, படித்தது, சினிமா என்றால் என்ன என்று தெரிந்து கொண்டது எல்லாமே இந்த மண்ணில்தான். என்னை சினிமாக்காரனாக உருவாக்கியது சென்னைதான். இதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். இந்த மாதிரி படம் […]