9 ஆண்டுகளுக்கு பின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன் ரசிகர்களை இன்று சந்தித்துள்ளார். இன்று அவர் மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று காலை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல், கரூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். பழம்பெரும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ரஜினியுடன் இந்த விழாவில் கலந்து கொண்டார். ரஜினிகாந்த் தன் பேச்சில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பற்றி பேசியபோது, “எஸ்.பி.எம். ஸார் என்னுடைய இன்னொரு சகோதரர். […]