இராமநாதபுரம், மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிபவர் ஓம் பிரகாஷ்மீனா. அம்மா அவர்களின் ஆசியுடன் திருவாடனை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவுடன், தென்மாவட்டங்களில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் (சாதி ரீதியாக) இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்ததால் துப்பாக்கி ஏந்திய போலீசார் (PSO) எனக்கு பாதுகாப்பு அளிக்க அம்மா உத்தரவிட்டார். அதன் பிறகு தொகுதிக்குச் செல்லும் போது ஒரு ஜீப்பில் உதவி ஆய்வாளர் தலைமையில், துப்பாக்கி ஏந்திய 5 போலீசார் அம்மா உத்தரவின் பேரில் எனக்கு பாதுகாப்பு அளித்தனர். […]