கையிலுள்ள கம்யூட்டரை தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள். என்று இளம் இசையமைப்பாளர்களுக்கு இளையராஜா அறிவுரை கூறினார்.இது பற்றிய விவரம் வருமாறு ; மெல்லிசை மன்னர் எம்.எஸ்..விஸ்வநாதன் நினைவுகளைப் போற்றிக் கொண்டாடும் விதமாக இசைஞானி இளையராஜா ‘என்னுள்ளில் எம்.எஸ்.வி. ‘என்கிற பிரமாண்ட லைவ் இசை நிகழ்ச்சியை நேற்று மாலை சென்னை காமராஜர். அரங்கத்தில் நடத்தினார். நிகழ்ச்சியின் அறிமுகவுரையில் இளையராஜாவை வரவேற்று வழிவிட்டு விடைபெற்றார் நடிகர் பிரகாஷ்ராஜ். நிகழ்ச்சியின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக முதலில் ஒலித்தது’நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல் . […]