🔯தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவிக்கென்றே தனிக்கோயில் உள்ள திருத்தலம் கூத்தனூர். 🔯சரஸ்வதி இத்தலத்தில் கருவறையில் கோயில் கொண்டதோடு மட்டுமன்றி, அரிசொல் ஆறு எனப்படும் அரசலாற்றில் கங்கை, யமுனை நதிகளோடு கலந்து தட்சிண திரிவேணி சங்கமமாக பரிணமிக்கிறாள் என பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #தலவரலாறு 🔯ஒரு சமயம் நான்முகனுக்கும் சரஸ்வதிக்கும் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் சபித்துக்கொண்டனர். 🔯இதன் விளைவாக பூமியில் பகுக்காந்தன், சிரத்தை எனும் பெயர்களில் சகோதரர்களாக பிறக்க நேரிட்டது. 🔯காலம் கணியும் போது இருவருக்கும் […]