மலேசியாவைச் சேர்ந்த டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் அண்மையில் வெளிவந்த சிறந்த தமிழ்ப் படைப்புக்கான உலகப்போட்டியை அறிவித்திருந்தது. அதில் உலகெங்குமிருந்தும் கலந்துகொண்ட 198 நூல்களில் சிறந்த படைப்பாக கவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் தேர்ந்தெடுக்கப்பட்டது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நேற்று அந்தப் பரிசளிப்பு விழா நடந்தது. பரிசுத்தொகையான 10000 அமெரிக்க டாலரை அறவாரியத்தின் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமாசுந்தரம் கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கினார். அறவாரியத்தின் செயலாளர் டத்தோ பி.சகாதேவன், மலேசியத் துணையமைச்சர் டத்தோ சரவணன், முன்னாள் […]