காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பார்வைக்காக யூட்யூபில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட ’கொலை விளையும் நிலம்’ ஆவணப்படத்துக்கு அரசியல், திரைத்துறை மற்றும் பொது தளங்களில் இருந்து வரவேற்பும் பாராட்டுகளும் வந்துகொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் அவல நிலையை எளிமையாகவும் முழுக்க முழுக்க நேர்மையாகவும் பதிவு செய்திருக்கும் ஆவணப்படம் ’கொலை விளையும் நிலம்’. காவேரி பிரச்னையில் தமிழகத்தின் நியாயத்தை நாட்டிற்கு எடுத்துரைக்கும் நோக்கில் கடந்த வாரம் யூட்யூபில் வெளியிடப்பட்டது. படம் வெளியான சில நிமிடங்களிலேயே டெல்லி […]
”கொலை விளையும் நிலம்” ஆவணப்படம் விவசாயிகளுக்கு சமர்ப்பணம்!
விவசாயிகளின் தொடர் மரணங்கள் ஆவணப்படம் ஆகிறது. பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க, ராஜுமுருகன் பாடல் எழுத சமுத்திரக்கனி குரல்கொடுக்க உருவாகும் ஆவணப்படம் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததோடு காவிரியில் தண்ணீர் வராததால் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் மாநிலம் முழுக்கவே விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகளின் தற்கொலைகளும் அதிர்ச்சி மரணங்களும் ஆங்காங்கே நிகழ்ந்தன. இந்த துயர சம்பவம் ’கொலை விளையும் நிலம்’ என்ற பெயரில் ஆவணப்படமாகிறது. தமிழகமெங்கும் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் […]