இந்த ‘தொண்டன்’ படம் குறித்து சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சமுத்திரக்கனி, “ஆறு மாதங்களாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில்தான் ‘அப்பா’ படத்தை எடுத்தேன். அதேபோலத்தான் இந்த ‘தொண்டன்’ படத்தையும் எடுத்திருக்கிறேன். இப்போது தினமும் பத்திரிகைகளை பார்த்தால் ஏதாவது ஒரு பிரச்சினை.. நடு ரோட்டில் கொலை, கல்லூரியில் கொலை, என்று பல செய்திகள் வருகின்றன. அப்படிப்பட்ட நிஜ சம்பவங்களின் கோர்வைதான் இந்த ‘தொண்டன்’ திரைப்படம். ஈரோட்டில் ஒரு கல்லூரிக்குள் சென்று வகுப்பில் அமர்ந்திருந்த மாணவியை ஒருவன் அடித்து கொலை […]