சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பாடபொருளானது கபிலன்வைரமுத்துவின் நாவல் கவிஞர் வைரமுத்துவின் இளையமகன் கபிலன்வைரமுத்து எழுதிய மெய்நிகரி என்ற நாவல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் “தற்கால தமிழிலக்கியம்” வகுப்பில் பாடபொருளாக கற்பிக்கப்பட்டது. இது தொடர்பாக தேசிய பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் டாக்டர் வாசுகி கைலாசம் கூறுகையில், “ஆகஸ்ட் 2015 முதல், நான் தெற்காசியக் கல்வித்திட்டத்தின்கீழ் (South Asian Studies Programme) சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பாடங்களைக் கற்பித்துவருகிறேன். தமிழில் மட்டுமே அமைந்த ‘தற்காலத் தமிழிலக்கியம்’ என்ற பாடத்தையும், ‘தமிழ்ச் சமூகமும் […]