இப்போதெல்லாம் எடுக்கப்படுகிற படங்களில் கதையைத் தேட வேண்டியிருக்கிறது. ஆனால் சினிமாவில் அறிமுகமாகிறவர்களிடம் தரமான கதைகள் கிடைக்கின்றன. படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர் வில்லன் நடிகரானதுடன் தயாரிப்பாளராகவும் ஆகிவிட்டார் என்றால் ஆச்சரியமில்லையா? தஞ்சாவூரைச் சேர்ந்தவர் ஏ.ஆர்.முஜீப். பால்ய வயதில் சினிமா மோகம் வந்து படங்களைப் பார்த்துத் தள்ளியவர், விஜயகாந்துக்கு தன்னிடம் திறமை இருப்பதாகவும் வாய்ப்பு கொடுத்தால் நிரூபிப்பதாகவும் கடிதம் எழுதியிருக்கிறார். சிலநாட்களில் விஜயகாந்த் அலுவலகத்திலிருந்து பதில் கடிதம் வந்திருக்கிறது. ‘திறமைக்கு வாழ்த்து, மகிழ்ச்சி! அலுவலகம் வந்து சந்திக்கவும் ‘என்று […]