ஜல்லிக்கட்டு தடைகளை உடையுங்கள் மத்திய மாநில அரசுகளுக்குக் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் கவிஞர் வைரமுத்துவை நிறுவனர் தலைவராகக் கொண்ட வெற்றித்தமிழர் பேரவை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துத் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடியது. அப்போது கவிஞர் வைரமுத்து பேசியதாவது: திருவள்ளுவர் தமிழினத்தின் பெருமை; அவரை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் தமிழர்கள் தங்கள் உயரத்தை உயர்த்திக் கொள்கிறார்கள். ஒவ்வோர் இனத்திற்கும் நில அடையாளம் மொழி அடையாளம் கலை அடையாளம் கலாசார அடையாளம் உண்டு. தமிழ் இனத்தின் […]