தங்கர் பச்சான் அறிக்கை: எந்தப்பக்கம் திரும்பினாலும் விவசாயிகளின் போராட்டங்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன.அவர்களை வீதியில் கதறவிட்டு நாமும் அரசாங்கங்களோடு சேர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். நாட்டில் யார் வேண்டுமானாலும் தங்களின் தேவைகளுக்காகவும்,ஊதியங்களுக்காகவும் போராடி வெற்றிபெற்றுவிட முடியும்.ஆனால், விவசாயிகள் மட்டும் காலம் முழுவதும் போராடிகொண்டே இருக்கவேண்டியதுதான். அவர்கள் நமக்கு தேவையான உணவுக்காகவும் சேர்த்துதான் போராடுகிறார்கள் என்பது புரியாமல் பொதுமக்கள் எனும் போர்வையில் நாம் எல்லோரும் விலகிக்கொண்டு விட்டோம். விவசாயிகளை கெஞ்ச விடுவது நமக்கும், நம் தேசத்துக்கும் அவமானமில்லையா? போராட்ட இடங்களை கடந்து […]