புதிய நிர்வாகம் பொறுப்பேற்றபின் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இரண்டாவது செயற்குழு கூட்டம் சென்னை தி நகரில் அமைந்துள்ள அக்கார்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு.நாசர் தலைமையேற்றார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.விஷால் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் கோரப்பட்டது. அவை, முதலாவதாக , அனுதாபத்தீர்மானத்தில் நடிகர் திரு.விவேக் அவர்களின் மகன் மறைந்த செல்வன்.பிரசன்னா அவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின் […]