என் இனிய தினேஷ் செல்வராஜ், கதைகளின் கருவலம் கதாபாத்திரங்களின் கதாநாயகன் என் நண்பன் R.செல்வராஜின் கடைக்குட்டியே.’நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பு இல்லை’ஒரு ஜனரஞ்சக படம் மட்டுமல்ல உயர பறக்க துடிக்கும் இன்றைய இளைஞர்களுடை எண்ணங்களின் பிரதிபலிப்பு. இந்த சமுகத்தில் கொட்டிக்கிடக்கும் உளவியல் உண்மைகளை எந்த சமரசமின்றி திரையில் கொண்டு வந்ததற்காக ஒரு கூடை பூக்கள் உனக்காக காத்திருக்கிறது; இந்த துணிச்சலும். சமுக சிந்தனையும் மதிப்புக்குரிய திருமணிரத்தினம் அவர்களின் மாணவன் என்பதை ஒவ்வெரு காட்சிகளிலும் காணமுடிகிறது.நேர்த்தியான திரைக்கதை. […]