புறா கூண்டு’ போல் தோற்றமளிக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று நண்பர்கள் வாடகைக்கு தங்கியுள்ளனர். ஆனால், பல மாதங்களாக பணத்திற்கு திண்டாடி வரும் அவர்களால் வாடகை பணத்தை செலுத்த இயலவில்லை. பலமுறை, பல வழிகளில் பணத்தை வசூலிக்க முயற்ச்சித்த குடியிருப்பின் உரிமையாளர்க்கு தோல்வி தான் மிச்சம். “இனி என் வழி இவர்களுக்கு சரி படாது; நமது காவலாளியின் வழி தான் இவர்களுக்கு பொருந்தும்” என எண்ணி, பணம் வசூலிக்கும் பொறுப்பை தனது காவலாளியிடம் ஒப்படைக்கிறார் குடியிருப்பின் உரிமையாளர். […]